வீட்டுக்கு வீடு ஒரு "ஜெபி" இருந்தால்.. முதியோர் இல்லமே தேவைப்படாது!

Jul 20, 2023,09:35 AM IST
- பூஜா

லண்டன்:  இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெபி என்ற இரண்டு வயது பூனை, தனது காதுகேளாத உரிமையாளருக்கு மிகுந்த உதவியாக இருப்பதற்காக தேசிய அளவிலான விருதைப் பெற்று அசத்தியுள்ளது.

ஜெபி பூனைக்கு "இந்த ஆண்டின் சிறந்த பூனை" என்ற பட்டத்தைப் பெற்று அத்துடன் இந்திய மதிப்பில் ரூ. 21,000 ரொக்கப் பரிசையும் தட்டிச் சென்றுள்ளது.

லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கும் விழாவில் ஜெபி பூனை ஃபேமிலி ஃபர்-எவர்  (Family Forever) என்ற பிரிவில் கலந்து கொண்டது. இறுதிச் சுற்றில் பங்கேற்ற நான்கு பூனைகளில் ஜெபிக்கு அதிக வாக்குகள் கிடைத்து வெற்றி பெற்றது.



ஜெபி பூனையோட விசேஷம் என்ன தெரியுமா.. அதற்கு தனியாக சிறப்புப் பயிற்சி எதுவும் கொடுக்கப்பட்டதில்லையாம். இப்படி எந்த பயிற்சியும் தராமல்தான் அந்தப் பூனையானது உரிமையாளருக்கு பல வகைகளிலும் உதவி செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான பிற செல்லப்பிராணிகளிலிருந்து இந்த உயரிய விருதின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதே முதலில் ஒரு பெரிய சாதனை தான். 

ஜெபியின் 66 வயதான உரிமையாளரின் பெயர் ஜெனிவீவ் மோஸ். இவருக்கு காது கேட்காது. எந்த சத்தத்தையும் உணர முடியாது. இவரது பிரச்சினையைப் புரிந்து கொண்ட ஜெபி தானாகவே இவருக்கு உதவத் தொடங்கியது. எப்படின்னா,  யாராவது காலிங் பெல் அடித்தால், உடனே மோஸை இது போய்த் தட்டி கதவைத் தட்டுகிறார்கள் என்று உணர்த்துமாம்.  அதேபோல போன் அடித்தாலும் அதை உணர்த்துமாம். தானாகவே இதையெல்லாம் அது செய்யத் தொடங்கியுள்ளது.

இது மட்டுமா செய்யுது ஜெபி.. அவரோட செருப்பை எடுத்து வந்து கொடுக்குமாம். போஸ்ட் பாக்ஸில் லெட்டர் போடப்பட்டிருந்தால் அதைப் போய் எடுத்து வந்து கொடுக்குமாம். இன்ன பிற பொருட்களையும் கூட கொண்டு வந்து மோஸிடம் கொடுக்குமாம். வீட்டுக்கு ஏதாவது டெலிவரி வந்தால் போய் சமத்தாக வாங்கிக் கொண்டு வந்து கொடுக்குமாம்.

இரவில் புதிதாக எதாவது சத்தம் கேட்டால், மோஸை எழுப்பி, அவருக்கு அதைத் தெரியப்படுத்த அவரது தலையில் அடிப்பது, அவரரது காது கேட்கும் கருவியை கழற்றி வைத்திருந்தால் அதை ஓடிப் போய் எடுத்து வந்து கொடுப்பது என்று தன் உரிமையாளரை சுற்றி சுற்றி வந்து ஒரு பிள்ளை போல பார்த்துக் கொள்கிறது. 

இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பற்றி ஜெபியின் உரிமையாளர் என்ன சொல்கிறார் தெரியுமா?

"ஜெபி இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. தனிமையிலும் இனிமை காண எனக்கு உதவும் என் உறவு ஜெபி. பூனைகள் எவ்வளவு அன்புடனும் அக்கறையுடன் இருக்கும், மேலும் அவை மக்களின் வாழ்க்கையில் என்ன நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை உலகிற்குக் காட்டிய என் ஜெபியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்று ஆனந்த கண்ணீருடன் கூறுகிறார். 

வீட்டுக்கு வீடு ஜெபி இருந்தால்.. எதிர்காலத்தில் முதியோர் இல்லமே தேவைப்படாது .. என்ன சொல்றீங்க?

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்