மனைவியைப் பிரிந்தார் யுஸ்வேந்திர சாஹல்.. 4 வருடத்தில் கசந்து போன வாழ்க்கை.. ரசிகர்கள் ஷாக்!

Feb 21, 2025,04:45 PM IST

டெல்லி: கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்துள்ளது கிரிக்கெட் மற்றும் நடன உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 4 வருடத்திலேயே இந்த மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல லெக்-ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புகழ்பெற்ற நடனக் கலைஞர் தனஸ்ரீ வர்மா விவாகரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ல் உற்சாகமான முறையில் கோலாகலமாக நடந்த திருமணம் இது. இப்போது இது முடிவுக்கு வந்து விட்டது.


யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகிய இருவரும் தத்தமது பீல்டில் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்தனர். 2020-ல் இவர்கள் நிச்சயதார்த்த செய்து கொண்டார்கள், அப்போதே ரசிகர்கள் உற்சாகமாக இதை வரவேற்றனர். அதே ஆண்டில், அதாவது கொரோனா ஊரடங்கு காலத்தில், குடும்பத்தினரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது.




சோஷியல் மீடியாவில் தங்கள் காதலையும், சந்தோஷத்தையும் அடிக்கடி பகிர்ந்து வந்த இந்த தம்பதியினர், அவர்களின் உறவை  ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வந்தனர். இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே இருவரும் ஒன்றாக எங்குமே செல்லவில்லை. இருவரையும் சேர்ந்து பார்ப்பதும் குறைந்து போனது. இதனால் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.


இந்த நிலையில்தான் இருவரும் தனித்தனியாக வாழ்க்கையை தொடர தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும். விவாகரத்துக்கான காரணங்கள் பற்றி எந்த அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட அது உண்மையே என்று கூறப்படுகிறது. 


சாஹல்  தனஸ்ரீ ஜோடி, சமூக ஊடகங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனால், இவர்களின் பிரிவானது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்த முடிவு எதிர்பார்த்ததாகக் கூறினாலும், சிலர் இது கண்ணுக்குத் தெரியாத வேதனை என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.


சாஹல் தற்போது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனஸ்ரீ தனது நடன பயணத்தை தொடர்ந்து, புதிய நடனக் காணொளிகள் மற்றும் கல்வி வீடியோக்களுக்கான முயற்சிகளில் கவனம் செலுத்திவருகிறார். இருவரும் தனித்தனி பாதையில் பயணிக்கத் தீர்மானித்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!

news

அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?

news

தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்

news

இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா.. இன்று உயர்ந்த தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..?

news

நாகை டூ இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை.. இன்று முதல் தொடக்கம்..!

news

சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!

news

ஆர்யா, கௌதம் கார்த்திக்.. கூட்டணியில் உருவாகியுள்ள.. மிஸ்டர் எக்ஸ் படத்தின்.. டீசர் இன்று வெளியீடு..

news

கெஜ்ரிவால் ஆரம்பத்தில் நல்லாத்தான் இருந்தார்.. பிறகுதான் கெட்டுப் போய் விட்டார்.. அன்னா ஹசாரே

அதிகம் பார்க்கும் செய்திகள்