சிசுவின் பாலினத்தை வெளியிட்ட விவகாரம்.. யூடியூப்பர் இர்ஃபானிடம் அதிகாரிகள் விசாரணை!

May 22, 2024,05:43 PM IST

சென்னை: தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில், இன்று இர்ஃபானிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பல்வேறு உணவகங்களுக்குச் சென்று உணவுகளை சுவைத்து அதனை வீடியோவாக யூடியூபில் வெளியிட்டு  பிரபலமானவர்  இர்ஃபான். இவருக்கு யூடியூபில் லட்சக்கணக்கான பாலோயர்கள் இருக்கிறார்கள். யூடியூப்பின் மூலம் பிரபலமான இவருக்கு  கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.  இர்பானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை ஒரு பார்ட்டி வைத்து அறிவித்து இருக்கிறார். குழந்தையின் பாலினத்தை துபாயில் உள்ள மருத்துவமனையில் கண்டறிந்துள்ளார்.




இந்த விழாவின் இறுதியில், ஸ்கேன்  முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பாலினத்தை அறிவதும், வெளியிடுவதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் இர்பான் மீது வழக்கு பாயும் சூழல் ஏற்பட்டுள்ளது. சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது இர்பானின் வீடியோ நீக்கப்பட்டுள்ளது. அவரும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில்  இர்ஃபானிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவரிடம் விளக்கம் கேட்ட பிறகு இந்த வழக்கை எப்படிக் கொண்டு போவது என்பது குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்