டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கைலாச பர்வதத்துக்குப் போய் தியானம் செய்து வந்த புகைப்படத்துக்கு நடிகர் அமிதாப் பச்சன் ஒரு கருத்து தெரிவிக்க, பிரதமர் நரேந்திர மோடி அதற்கு ஜாலியான பதில் கொடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், உத்தரகாண்ட மாநிலம் பிதோரகார் மாவட்டத்தில் உள்ளக கெளரி குந்த் என்ற இந்துக்களின் புனித இடத்திற்குச் சென்றிருந்தார். அங்கு வழிபாடுகளை நடத்திய அவர் அங்கிருந்தபடி ஆதி கைலாச மலையின் எழிலார்ந்த காட்சியைக் கண்டு மகிழ்ந்தார். மேலும், அங்கு அமர்ந்து தியானமும் செய்தார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பலரும் அதற்கு கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இந்தப் புகைப்படத்துக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அமிதாப் பச்சன் போட்டிருந்த டிவீட்டில், இறைமை, அற்புதம்.. கைலாச பர்வதத்தின் புனிதம்.. நீண்ட நாட்களாகவே இது என்னை மயங்கச் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு முறை கூட இங்கு நான் போக முடியவில்லை என்பதுதான் பெரும் சோகமே என்று ஏக்கத்துடன் கூறியிருந்தார்.
அமிதாப் பச்சனின் இந்தக் கருத்தைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி அதற்குப் பதில் கொடுத்துள்ளார். பார்வதி குந்த், ஜாகேஸ்வர் கோவில்களுக்கு நான் போயிருந்தது மிகவும் அருமையான அனுபவத்தைக் கொடுத்தது. வரும் வாரங்களில் ரான் உத்சவ் ஆரம்பிக்கிறது. நீங்கள் கட்ச் போய் விட்டு வர வேண்டும் என்று உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.. பிறகு, சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை சிலையையும் நீங்கள் இன்னும் பார்க்காமல் உள்ளீர்கள் என்று கூறியிருந்தார் பிரதமர் மோடி.
சர்தார் வல்லபாய் படேல் சிலை குஜராத்தில் உள்ளது. உலகின் மிகப் பெரிய சிலையாக இது வர்ணிக்கப்படுகிறது. அதையும் அமிதாப் பச்சன் இன்னும் பார்க்கவில்லை என்பதை தனது பாணியில் பிரதமர் மோடி நினைவூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}