கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சேவை இலங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் யோஷிதா கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை குற்ற புலனாய்வு காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் புத்திகா மனதுங்கா கூறுகையில், பெலியத்தாவில் வைத்து இன்று காலை யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு பிற விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையில் லெப்டினன்ட் பதவி வகித்தவர் யோஷிதா ராஜபக்சே. மகிந்தா ராஜபக்சேவின் 2வது மகன் ஆவார். இவர் மீது பல வருடங்களாகவே பல்வேறு வகையான புகார்கள் இருந்து வருகின்றன. கடந்த 2016ம் ஆண்டு கூட இவர் நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அப்போது நிதிக் குற்றம் தொடர்பான சிறப்புக் காவல்படை அவரைக் கைது செய்திருந்தது.
மகிந்தா ராஜபக்சேவுக்கு மொத்தம் 3 பிள்ளைகள். இதில் முதல் மகன் பெயர் நமல் ராஜபக்சே. இவர் ராஜபக்சே அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். அடுத்தவர்தான் யோஷிதா ராஜபக்சே. கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 3வது மகன் பெயர் ரோஹிதா ராஜபக்சே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}