மக்களே வெளியே செல்லாதீர்கள்.. தமிழ்நாட்டில்.. இன்றும் நாளையும்.. வெப்ப அலை..மஞ்சள் நிற எச்சரிக்கை!

May 02, 2024,06:39 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கான  மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தேவையில்லாமல் வெளியில் அலைவதை மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


இன்று மட்டும் 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும், அந்த பகுதிகளில் வெப்ப அலைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .


தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தமிழக அரசு சார்பாக குடிநீர் வழங்குதல், ஓஆர்எஸ் கரைசல் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க  மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியும் வருகின்றனர்.




இந்த நிலையில் தமிழ்நாட்டில் மே ஒன்று, இரண்டு ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீச கூடும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்த நிலையில், இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்றும், நாளையும்  வெப்ப அலைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இதில் இன்று மட்டும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், ஈரோடு,திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஆகிய 19 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும். அப்போது  இப்பகுதிகளில் வெப்ப அலை வீச கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலூரில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் 20 இடங்களில் சதம் அடித்தது. இவ்வாறு அதிக அளவிலான ஊர்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது இதுவே முதல் முறையாகும். மேலும் மே மாதத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்