பீஜிங் : இந்தியாவில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க சீன அதிபர் ஷின் ஜிங்பிங் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜி 20 மாநாடு அடுத்த வாரம் டில்லியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்றும், தனக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்வார் என்றும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மோடியை ஏற்கனவே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
இந்நிலையில் இந்தியா - சீனா எல்லை விவகாரம் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு பெயர் மாற்றிய சீனா, தற்போது அருணாச்சல பிரதேசத்தை சீனாவிற்கு உட்பட்ட பகுதி என குறிப்பிட்டு வரைபடம் வெளியிட்டு, மீண்டும் எல்லை பிரச்சனையை ஊதி பெரிதாக்கி உள்ளது. இரு நாடுகள் இடையேயான எல்லை பிரச்சனை தீவிரமடைந்த வரும் நிலையில், இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டை புறக்கணிக்க சீன அதிபர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஷி ஜின்பிங், இந்தியா வருவது தொடர்பாக இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. ஜி 20 மாநாடு தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாமளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார். சீனா சார்பில் பிரதிநிதிகள் யாராவது கலந்து கொள்கிறார்களா என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளிக்க மறுத்து விட்டது.
ஆனால் ஷி ஜிங்பிங், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அவர் கலந்து கொள்வார் என நம்புவதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!
{{comments.comment}}