பாவேந்தர் பாரதிதாசன் விருது விழாவில்.. எழுத்தாளர் -கவிஞர் இரா. கலைச்செல்விக்கு தமிழ்மாமணி விருது!

Apr 21, 2025,04:26 PM IST
திருச்சி: பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் நடந்த விழாவில், எழுத்தாளர் -கவிஞர் இரா.கலைச்செல்விக்கு தமிழ்மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு,  20/4/2025 அன்று திருச்சியில் உள்ள வசந்தம் அரங்கத்தில் முப்பெரும் விழா  நடைபெற்றது.  பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, 423 வது மாத இளந்தென்றல் கவியரங்கம் மற்றும் தமிழ்ப்பணி, இலக்கியப் பணி, கவிப்பணி, பொதுப்பணி, சிறந்த தொழில் முனைவோர் மற்றும் உழைப்பால் உயர்ந்தோர் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் உலகம் போற்றும் பாவேந்தர் பாரதிதாசனின் பேரனான கலைமாமணி முனைவர் கோ. பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்மாமணி விருது, கவிமாமணி விருது, உழைப்பு செம்மல் விருது, வாழ்நாள் சாதனை விருது,  ஆகிய உயரிய விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.



இதில் 2025 ஆம் ஆண்டுக்கான  தமிழ்மாமணி விருது கவிஞர் - எழுத்தாளர். இரா கலைச்செல்வி அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார்.

அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்

news

திருமண நாளான இன்று மனைவிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த.. எஸ்.ஏ சந்திரசேகர்..!

news

ஒரு நிஜம் .. ஒரு கற்பனை..!! (சிறுகதை)

news

பிரியா விடை பெற்ற.. தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்..!

news

கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

news

காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!

news

தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!

news

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!

news

தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்த வேண்டும்: சீமான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்