சென்னை: பிரபல தமிழ் எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
தேவிபாரதி எழுதிய நீர்வழிப்படூஉம் நூலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் விழாவில் எழுத்தாளர் தேவிபாரதிக்கு விருதும், அதற்குரிய பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் தேவிபாரதி சிறந்த புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் தேவிபாரதி. 1975 முதல் எழுதி வரும் தேவிபாரதி, சாமானிய மக்களின் வாழ்க்கையைச் சுற்றி தனது எழுத்துக்களத்தை அமைத்துக் கொண்டவர்.
சமூக உளவியல் பிரச்சினைகள் குறித்து நிறைய எழுதியுள்ளார். இடையில் சாலை விபத்தில் சிக்கி பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட இவர் அதிலிருந்து மீண்டு வந்த பின்னர் எழுதிய நூல்களில் ஒன்றுதான் நீர்வழிப்படூஉம். இந்த நாவலுக்குத்தான் தற்போது சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவிலும், டிவி தொடர்களிலும் கூட இவரது பங்களிப்பு இருந்துள்ளது. தமிழ் இலக்கிய உலகின் மிகச் சிறந்த எழுத்தாளுமைகளில் ஒருவரான தேவிபாரதிக்கு சாக்திய அகாடமி விருது கிடைத்திருப்பதை இலக்கிய உலகினர் பாராட்டியும், வாழ்த்தியும் வருகின்றனர்.
தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!
தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!
கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை
கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!
மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!
35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி
வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்
சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?
{{comments.comment}}