"உங்களை சஸ்பெண்ட் பண்றோம்".. இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு "ஷாக்"!

Aug 24, 2023,06:46 PM IST
டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனம் இன்னும் தேர்தலே நடத்தாமல் இருப்பதால் அதை சஸ்பெண்ட் செய்வதாக சர்வதேச மல்யுத்த சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ்பூஷன் சரண் மீது பாலியல் மோசடிப் புகார்களை சுமத்தி இந்திய மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. இந்த அக்கப்போரில் தற்போது தேர்தலை மறந்து போனதால், சஸ்பெண்ட் நடவடிக்கையை இந்திய மல்யுத்த சங்கம் எதிர்கொண்டுள்ளது.



ஜூன் மாதமே  தேர்தல் நடத்தப்பட்டிருக்க  வேண்டும்.  ஆனால் தொடர் போராட்டங்கள் காரணமாக தேர்தலை நடத்த முடியாமல் போய் விட்டது. இதனால் சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் சார்பாக சம்மேளனத்திலிருந்து யாரையும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 16ம்தேதி தொடங்கும் ஒலிம்பிக் தகுதிச் சுற்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நியூட்ரல் வீரர்களாகவே இந்தியாவின் சார்பில் பங்கேற்போர் கலந்து கொள்ள முடியும்.

பிரிஜ்பூஷன் சரண் மீதான புகார்களைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். அதன் பின்னர் இந்திய ஒலிம்பிக் சங்கம், பூபேந்தர் சிங் பஜ்வா தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாகக் குழுவை அமைத்தது. இந்தக் குழு 45 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடக்கவில்லை.

தேர்தலை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று சர்வதேச மல்யுத்த சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதை இந்திய மல்யுத்த சம்மேளனம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. இதனால் தற்போது சஸ்பெண்ட் நடவடிக்கையை சர்வதேச சங்கம் எடுத்து விட்டது.

இந்த ஆண்டு 3வது முறையாக இந்திய மல்யுத்த சம்மேளனம் சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்கொள்கிறது. முதலில் ஜனவரி மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. பின்னர் மே மாதம் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 3வது முறையாக சஸ்பெண்ட் ஆகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்