நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கார் கதவை சற்றும் யோசிக்காமல், பட்டென்று திறந்து விட்டார் ஒரு பெண் டாக்டர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் காரர் கார் கதவு மீது மோதி கீழே விழுந்து அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்து போனார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் சித்ரா. இவர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி காரை தெருவின் ஒரமாக நிறுத்தி விட்டு, அக்கம் பக்கம் உள்ள எதையும் கவனிக்காமல் சட்டென்று கார் கதவை திறந்துள்ளார். கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல் கதவைத் திறந்து விட்டார் டாக்டர் சித்ரா.
அப்போது பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால், எதிர் பாராத விதமாகபைக்கை ஓட்டி வந்த சரவணன் கார் கதவு மீது மோதி தூக்கி வீசப்பட்டார். சம்பவத்தை பார்த்து அதிர்ந்து போன அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து சரவணனை மீட்டனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சரவணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறினர்.
இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்த போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். சிசிடிவி பூட்டேஜைப் பார்த்ததில், சித்ராவின் அலட்சியமும், அஜாக்கிரதையுமே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் பதிவான சிசி டிவி பூட்டேஜ் தற்பொழுது சமூக வளைதலங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெண் டாக்டரின் அஜாக்கிரதையால் ஒரு அப்பாவி உயிர் பறி போனது வேதனையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}