நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கார் கதவை சற்றும் யோசிக்காமல், பட்டென்று திறந்து விட்டார் ஒரு பெண் டாக்டர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் காரர் கார் கதவு மீது மோதி கீழே விழுந்து அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்து போனார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் சித்ரா. இவர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி காரை தெருவின் ஒரமாக நிறுத்தி விட்டு, அக்கம் பக்கம் உள்ள எதையும் கவனிக்காமல் சட்டென்று கார் கதவை திறந்துள்ளார். கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல் கதவைத் திறந்து விட்டார் டாக்டர் சித்ரா.
அப்போது பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால், எதிர் பாராத விதமாகபைக்கை ஓட்டி வந்த சரவணன் கார் கதவு மீது மோதி தூக்கி வீசப்பட்டார். சம்பவத்தை பார்த்து அதிர்ந்து போன அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து சரவணனை மீட்டனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சரவணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறினர்.
இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்த போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். சிசிடிவி பூட்டேஜைப் பார்த்ததில், சித்ராவின் அலட்சியமும், அஜாக்கிரதையுமே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் பதிவான சிசி டிவி பூட்டேஜ் தற்பொழுது சமூக வளைதலங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெண் டாக்டரின் அஜாக்கிரதையால் ஒரு அப்பாவி உயிர் பறி போனது வேதனையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
Thala is Back: மீண்டும் கேப்டனானார் தல தோனி.. ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!
விடைபெறுகிறார் அண்ணாமலை.. வந்தாச்சு தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்தல்.. நாளை விருப்ப மனு!
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
{{comments.comment}}