நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு.. ஆம்னி பஸ்கள் ஓடுமா.. இரு வேறு தகவல்களால்  குழப்பம்!

Dec 18, 2023,10:20 AM IST

சென்னை: நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் பாதிப்பு அதிகம் இருப்பதால் இங்கு ஆம்னி பஸ்கள் இன்று இயக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


24 மணி நேரத்திற்கும் மேலாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்ததால் இங்கு பெரும்பாலான நகரங்கள் நீரில் மிதக்கின்றன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


தூத்துக்குடி, நெல்லை நகரங்கள் நீரில் மிதிக்கின்றன. காயல்பட்டினம் நீரில் மிதக்கிறது. தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் இப்போது வரை விடாமல் மழை பெய்து வருகிறது.




இதேபோல தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அதீத வெள்ள பாதிப்பை சந்தித்த நெல்லை, குமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்று ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக அதன் இணையதளத்தில் ஒரு அறிவிப்பை அது வெளியிட்டுள்ளது.


அதில், பத்திரிகைகளில் உலா வருவது போல எந்த முடிவையும் இதுவரை நாங்கள் எடுக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை எங்களது சேவையில் 80 சதவீத சேவை தொடர்கிறது. இன்றும் வழக்கம் போல எங்களது சேவைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இரு வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதால் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


இருப்பினும் தற்போது மேற்கண்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் பஸ்களை இயல்பான முறையில் இயக்க முடியுமா என்று தெரியவில்லை.  ஏற்கனவே சில ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது நினைவிருக்கலாம். அரசு பஸ்களும் கூட சூழலுக்கேற்பவே இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே அதேபோலவே ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பொதுமக்களும் சூழலுக்கேற்ப தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்