என்னாது.. ரோஹித் சர்மாவுக்கு 50 கோடி சம்பளமா.. அதிர வைக்கும் லக்னோ அணியின் ஆஃபர்!

Aug 29, 2024,05:22 PM IST

மும்பை:  மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக வலம் வரும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை ரூ. 50 கோடி வரை கொடுத்து தன் பக்கம் இழுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி தயாராக இருப்பதாக ஒரு தகவல் பரவியுள்ளது.


இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார் ரோஹித் சர்மா. அதேசமயம், ஐபிஎல்லைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு 5 முறை கோப்பையை வாங்கிக் கொடுத்தவர். கடந்த சீசனில் அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஹர்டிக் பான்ட்யா கேப்டனாக்கப்பட்டார். இதனால் ரோஹித் சர்மா ரசிகர்கள் கடும் அப்செட்டானார்கள்.




இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் இப்போதே கிளம்பி விட்டன. குறிப்பாக சில முக்கியமான வீரர்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதில் பலரும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ரோஹித் சர்மாவை மிகப் பெரிய தொகைக்கு வாங்க லக்னோ அணி தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது ரூ. 50 கோடி வரை சம்பளம் கொடுக்க லக்னோ அணி ரெடியாக காத்திருக்கிறதாம். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ரோஹித் சர்மாவை வாங்கி விட்டால் கப்பு நிச்சயம் என்று லக்னோ திடமாக நம்புகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்தியவர் ரோஹித் சர்மாதான். அவரது தலைமையில்தான் ஐபிஎல் அணிகளிலேயே மிகவும் வலுவான அணியாக மும்பை இந்தியன்ஸ் இத்தனை காலமாக விளங்கி வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடும் டஃப் கொடுத்த ஒரே அணி மும்பைதான். அதற்குக் காரணம் ரோஹித் என்பதில் சந்தேகம் இல்லை.


இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி உலா வருவது குறித்து லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், எந்தக் காரணமும் இல்லாமல் இந்த யூகங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. ஒரு வேளை ரோஹித் சர்மா வருகிறார் என்றே வைத்துக் கொள்வோம், ஒரு வீரருக்காக மொத்த அணியின் சம்பளத்தில் பாதியை அவருக்குக் கொடுத்து விட்டு, மற்ற 22 பேரையும் எப்படி நிர்வகிப்பது?


எல்லா அணிகளுக்குமே ஒரு விருப்ப பட்டியல் இருக்கும். சில வீரர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். இந்த கேப்டன் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று விரும்புவோம்.  அது நமது தனிப்பட்ட விருப்பம். அதேசமயம், என்ன கையில் இருக்கிறதோ அதுதான் எதார்த்தம். நீங்கள் விரும்புவதையெல்லாம் பெற்று விட முடியாது இல்லையா.. அது அணிகளுக்கும் பொருந்தும். எல்லோருமே நமக்குக் கிடைத்து விட மாட்டார்கள் என்றார் கோயங்கா.


கோயங்கா சொல்வதை வைத்துப் பார்த்தால் இது வதந்தியாகவே தெரிகிறது. ஆனால் அரசியல் போலத்தான் விளையாட்டும்.. எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்