ஆளுநர் பதவியில் தொடருவாரா ஆர்.என்.ரவி.. அல்லது புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா.. 31க்குள் தெரியும்!

Jul 29, 2024,06:49 PM IST

சென்னை: நாடு முழுவதும் 10 மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஆளுநராக பதவி வகித்து வரும் ஆர் என் ரவியின்  பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா.. அல்லது புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா.. என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


2024 -25 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பின்னர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமராக பொறுப்பேற்ற பின் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 




இந்த நிலையில் சமீபத்தில் பத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதேபோல, புதுச்சேரியில் கே.கைலாஷ்நாதன், தெலங்கானா மாநிலத்தில் ஜிஷ்னு தேவ் சர்மா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சந்தோஷ் கங்க்வார், ராஜஸ்தானில் ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, சத்தீஸ்கர் மாநிலத்தில் ராமன் தேகா, பஞ்சாப்  மாநிலத்தில் குலாம் சந்த் கட்டாரியா, சிக்கிம்  மாநிலத்தில் ஓம் பிரகாஷ் மாத்தூர், அசாம் மாநிலத்தில் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா, மேகாலயாவில் விஜயசங்கர் ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.


இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர். என். ரவியின் பதவிக்காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் தொடரக் கூடும் என்ற பேச்சு உள்ளது. அதேசமயம், அவர் நீடிப்பாரா அல்லது புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா என்பதில் இதுவரை தெளிவு இல்லை. சமீப காலமாக தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே எந்த உரசலும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் புதிய ஆளுநர் வர வாய்ப்பிருப்பதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது.


எது எப்படி இருந்தாலும் 31ம் தேதியுடன் ஆளுநரின் பதவிக்காலம் முடிவதால், அதற்குள் ஆளுநர் நீடிப்பாரா அல்லது புதிய ஆளுநர் வருவாரா என்பது தெரிந்து விடும்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்