திரையுலகமே திரண்டு வந்து கொண்டாடப் போகும் "கலைஞர் 100".. ஆமா.. அஜீத் வருவாரா?

Nov 17, 2023,06:49 PM IST

சென்னை: தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் அஜீத் கலந்து கொள்வாரா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.


தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர்  கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழா தொடர்பான அழைப்பிதழ் வைக்கும் பணியை தயாரிப்பாளர் சங்கத் தலைவர்  என். ராமசாமி தலைமையிலான குழு மேற்கொண்ண்டுள்ளது. முக்கியக் கலைஞர்களுக்கு அவர்களே நேரில் போய் அழைப்பு வைக்கிறார்கள்.


கமல்ஹாசனுக்கு அழைப்பு வைத்தார்கள். இந்த நிலையில்  தற்போது நடிகர் ரஜினிகாந்த்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் விழா குழு சார்பில் நேரில் சென்று அழைத்துள்ளனர். நிச்சயம் வந்து கலந்து கொள்வதாக ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளாராம்.




இந்த நிலையில் நடிகர் அஜித், இந்த விழாவுக்கு அழைக்கப்படுவாரா? என்ற கேள்வி தற்பொழுது சமூக வலைதளங்களில் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தின் போது, திரைத் தொழிலாளர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இதைப் பாராட்டும் வகையில், கடந்த 2010ம் ஆண்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சி திரையுலகம் சார்பில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் போது பேசிய அஜித்குமார் மேடையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். முதலில் கருணாநிதியைப் பாராட்டிப் பேசிய அவர் சமூக நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போன்ற சினிமாவில் இருப்பவர்களை மிரட்டி வரவைக்கின்றனர். எங்களுக்கு அரசியல் வேண்டாம். யாரும் எங்களை கட்டாயப்படுத்த கூடாது என்று நீங்கள் தான் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று பகிரங்கமாகவே கருணாநிதிக்கு கோரிக்க வைத்தார் அஜீத். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



அஜீத் பேச்சைக் கேட்டதும், ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார். அனைவரும் கருணாநிதியைப் பாராட்டிக்கொண்டிருந்த வேளையில் அஜித் இப்படி பேசியது அரங்கில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த பேச்சு பெரும் பரபரப்பாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அஜீத் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. அவரது படம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கே அவர் வருவதில்லை. அவரது படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழா கூட நடந்ததில்லை. தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர் அவர்.


அஜீத்தை விடுங்க .. விஜய் வருவாரா?




இப்படிப்பட்ட நிலையில், கலைஞர் 100 விழாவிற்கு  அஜித் அழைக்கப்படுவாரா.. அப்படியே அழைத்தாலும் அவர் வருவாரா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.  அஜீத்தை விடுங்க.. முதல்ல விஜய் வருவாரா என்ற இன்னொரு கேள்வியும் எழுந்துள்ளது. அவரது லியோ பட வெளியீட்டுக்கு முன்னதாக ஆடியோ வெளியீட்டு விழா திட்டமிடப்பட்டிருந்தது. அதை தடுத்து விட்டதாக ஒரு குற்றச்சாட்டு அப்போதே கிளம்பியது. அதில் அரசியல் செய்து விட்டார்கள் என்றும் புகார் கிளம்பியது. சீமான் கூட அதுகுறித்துப் பேசியிருந்தார். எனவே விஜய் இந்த விழாவுக்கு வருவாரா என்ற கேள்வியும் கூடவே கிளம்பியுள்ளது.


பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்