"ஏன் துபாய்க்கு கூட்டிட்டுப் போகலை".. கணவர் முகத்தில் ஓங்கி குத்திய மனைவி.. கடைசியில்..!

Nov 25, 2023,05:28 PM IST

புனே: தனது பிறந்த நாளுக்கு காஸ்ட்லி கிப்ட்டும் தரலை, டெல்லிக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னா அதுக்கும் பெர்மிஷன் தரலை.. துபாய்க்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லியும் கூட்டிட்டுப் போகலை என்பதால் கோபமடைந்த மனைவி, தனது கணவர் முகத்தில் ஓங்கி குத்தி விட்டார். இதில் படுகாயமடைந்த கணவர் பரிதாபமாக இறந்து போனார்.


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வனாவ்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிகில் கண்ணா. இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ரேணுகா. 38 வயதாகும் ரேணுகாவும் நிகில் கண்ணாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆறு ஆண்டுகளாக சந்தோஷமாக திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.


இந்த நிலையில் ரேணுகாவுக்கு பிறந்தநாள் வந்தது. இதை துபாயில் கொண்டாட அவர் விரும்பினார். ஆனால் அங்கு சென்று கொண்டாட விரும்பவில்லை நிகில் கண்ணா. இதனால் துபாய்க்கு கூட்டிச்செல்ல மறுத்தார்.  சரி பரவாயில்லை, டெல்லியில் போய் உறவினர்களுடன் கொண்டாடிக் கொள்கிறேன். அதற்காவது அனுமதியுங்கள் என்று கேட்டுள்ளார் ரேணுகா. அதற்கும் நிகில் கண்ணா அனுமதி தரலையாம். இதனால் கடு் ஏமாற்றமடைந்தார் ரேணுகா. தான் கேட்ட காஸ்ட்லியான கிப்ட்டுகளையும் கூட நிகில் கண்ணா தரவில்லையாம். 




இதனால் கோபமடைந்தார் ரேணுகா. இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது தன்னுடைய பேச்சைக் கேட்க மறுத்த கணவர் மீது கோபம் அடைந்த ரேணுகா, நிகிலின் முகத்தில் ஓங்கி குத்தி விட்டார். இதில் மூக்கில் பலத்த அடிபட்டு பற்களும் உடைந்து முகமெல்லாம் ரத்தக் களறியாகி விட்டது. சில நொடிகளில் சுய நினைவிழந்து மயங்கி விழுந்தார் நிகில் கண்ணா.  இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ரேணுகா.


உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிகில் கண்ணா, அங்கு மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ரேணுகா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


புருஷனை மூஞ்சியில் குத்தலாம்.. மூக்கை உடைக்கலாம்.. ஏன் அடிக்கலாம், மிதிக்கலாம்.. மனைவிகளுக்கு முழு உரிமை இருக்கு..  அதுக்காக இப்படியா உயிர் போற அளவுக்கு அடிப்பாங்க..!

சமீபத்திய செய்திகள்

news

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.. விஜய் கட்சியின் கட் அவுட்கள் ஒரு நல்ல தொடக்கம்.. செல்வப்பெருந்தகை

news

வி. சாலை எல்லையில்.. இரு கைகளையும் விரித்தபடி.. இதய வாசல் திறந்து வைத்து காத்திருப்பேன்.. விஜய்

news

Sprituality: வீட்டில் செல்வம் சேர.. விளக்கேற்றி வழிபடும்போது.. தவறாமல் இந்த மந்திரத்தை சொல்லுங்க!

news

Gold Rate: வியாழக்கிழமை குறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது... எவ்வளவு தெரியுமா?

news

Deepavali Special Story: இப்பெல்லாம் யாருங்க துணி எடுத்து தைக்கிறாங்க.. நலிவடையும் சிறு டெய்லர்கள்!

news

தீவிர புயலாகவே கரையைக் கடந்தது.. டானா.. தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில்.. இன்று மழைக்கு வாய்ப்பு!

news

அக்டோபர் 25 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

சிம்ம ராசிக்காரர்களே... பெயர், புகழ் அதிகரிக்கும் நாள்

news

ஓய்வு பெறுகிறார் நீதிபதி டிஒய் சந்திரசூட்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்