கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா, பான்டிங், பிளமிங், ஜஸ்டின் லாங்கர்.. இவர்களில் யார் அடுத்த ராகுல் டிராவிட்??

May 16, 2024,06:00 PM IST
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் இந்தியரா அல்லது வெளிநாட்டுக்காரரா என்ற பொதுவான கேள்வியைத் தாண்டி இப்போது, இவர்களில் யாராக இருக்கும் என்ற அடுத்த கட்ட விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வலம் வந்து, அருமையான ஆட்டக்காராக இருந்து அசத்திய ராகுல் டிராவிட் தற்போது அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. மீண்டும் பதவியில் நீடிக்க ராகுல் டிராவிட் விரும்பவில்லை. இதனால் புதிய பயிற்சியாளரைத் தேடவுள்ளது பிசிசிஐ.

இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது தொடர்பான விவாதம் சூடு பிடித்துள்ளது. பலரது பெயர்கள் இதில் அடிபடுகின்றன.



முன்னாள வீரர் வி.வி.எஸ் லட்சுமண் பெயர் முதன்மையாக அடிபடுகிறது. இவர் ராகுல் டிராவிட் காலத்தில் தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்தவர். மிகச் சிறந்த பேட்ஸ்மேன். இவரது பெயர் கடந்த முறையே அடிபட்டது. ஆனால் பயிற்சியாளர் பதவியை வகிக்க லட்சுமணுக்கு விருப்பம் இல்லை என்று ஒரு தகவல் கூறுகிறது.

முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தலைமைப் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் பெயர் அடிபடுகிறது. இதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டது முதலே அதன் பயிற்சியாளராக நீடித்து வரும் ஸ்டீபன் பிளமிங், முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர், முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரின் பெயர்களும் பயிற்சியாளர் பதவிக்குரிய போட்டியில் அடிபடுகிறது.

இவர்களை விட முக்கியமாக அடிபடுவது ரிக்கி பான்டிங் பெயர்தான். முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன். 2 முறை உலகக் கோப்பையைத் தட்டிக் கொடுத்தவர். அதிரடியான கேப்டனாக மட்டுமல்லாமல் அட்டகாசமான பேட்ஸ்மேனாகவும் அசத்தியவர்  சமீபத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஜீத் அகர்கர் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார் பான்டிங். முன்பு மும்பை ஐபிஎல் அணியுடன் இணைந்திருந்த ரிக்கி பான்டிங் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

இதேபோல கெளதம் கம்பீர் பெயரும் வலுவாக அடிபடுகிறது.  மறுபக்கம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் பந்து வீச்சாளருமான ஆசிஷ் நெஹ்ராவின் பெயரும் அடிபடுகிறது. போட்டிக் களத்தின்போது இவரது செயல்பாடுகள் பலரையும் கவர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பேசப்படும் வீரர்களில் ரிக்கி பான்டிங் மற்றும் ஸ்டீபன் பிளமிங்கின் பெயர்கள்தான் அதிகமாக அலசப்படுகின்றன. இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.  பயிற்சியாளர் பதவிக்கு மே 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன் பிறகுதான் ஒரு தெளிவு கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்