சென்னை: இதுவரை வாட்ஸ் அப் பச்சை நிறத்தில் மட்டுமே காட்சி அளித்து வந்த நிலையில், இனி பல்வேறு நிறங்களில் வாட்ஸ் அப் செயலியின் தீமை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
"காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை.. "அம்மா" கிடையாது.. "மம்மி"யும் கிடையாது.. மாறாக வாட்ஸ் அப்தான்!,. இன்று வாட்ஸ் அப்பில் தான் பெரும்பாலானவர்கள் கண் விழித்து முதலில் பார்க்கின்றனர். அந்த அளவிற்கு வாட்ஸ்அப் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் பெரும்பாலான பயனாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் அவ்வப்போது புதுப்புது மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும். இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் ஐந்து நிறங்களில் செயலியின் தீமாக கொண்டுவந்துள்ளது மெட்டா நிறுவனம். இனி பயனர்கள் தங்களுக்கு ஏற்றார் போல நிறங்களை மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அப்டேட்டின் படி வாட்ஸ் அப் செயலி ஐந்து வெவ்வேறு நிறங்களில் தீம்களில் வரும் என மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நோட்டிபிகேஷன் நிறங்களை கூட பயனாளர்கள் தங்களுக்குப் பிடித்தாற் போல மாற்றிக் கொள்ள முடியும்.
இதுக்கு நாம என்ன செய்யணும் தெரியுமா?
உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ios சாதனத்தில் வாட்ஸ் அப்பை திறக்கவும்.
வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தட்டவும்.
செட்டிங்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சாட்கள் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
தீம் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
இந்தப் பக்கத்தில் சிஸ்டம் டீபால்ட், லைட் மற்றும் டார்க் ஆகியவை இருக்கும். அதன் பின் பச்சை, நீலம், வெள்ளை, பிங்க், ஊதா என 5 நிறங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}