சென்னை: தமிழக வானிலை முன்னறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தொடர்ந்து ஹிந்தி மொழியும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மதுரை எம்.பி சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் சென்னை வானிலை ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாடு,புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளின் தினசரி வானிலை நிலவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடுவது வழக்கம். இதற்கான அதிகாரப்பூர்வ தனி இணையமும் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் மக்கள் வானிலை முன்னறிவிப்புகளை அறிந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தொடர்ந்து இந்தி அறிக்கையும் சேர்த்துள்ளது.
மும்மொழிக் கொள்கை எனப்படும் இந்தி திணிப்பிற்கு தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வானிலை முன்னறிவிப்பில் ஹிந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சு. வெங்கடேசன் கண்டனம்
இது குறித்து எம்பி சு.வெங்கடேசன் மத்திய அரசை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது.
பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும் என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் இதை எதிர்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென் இந்தியாவில் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வானிலை அறிக்கை ஆங்கிலத்துடன் வெளிவந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் முதன் முறையாக இந்தி மொழியுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இங்கு மும்மொழிக்கொள்கை குறித்து சர்ச்சையாகவுள்ள நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இடம்பெறும். இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது ஒன்றிய அரசு. இந்த செயல் ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது.
இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. ஆனால், வலுக்கட்டாயமாக திணிப்பதைத்தான் எதிர்க்கின்றோம். எந்தவகையிலாவது இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பதிலேயே தீவிரமாகவுள்ள ஒன்றிய அரசுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}