வயநாடு: வயநாடு நிலச்சரிவால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். அங்கு பதினோராவது நாளாக மீட்பு பணி தீவிரம் அடைந்து வரும் நிலையில் கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.
மலையாள மொழி பேசும் மக்களின் பிரதான பண்டிகையான ஓணம் பண்டிகை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இது அவர்களின் பாரம்பரிய பண்டிகையும் கூட. இப் பண்டிகை பத்து நாட்கள் வரை மிகச் சிறப்பாக நடைபெறும். கேரளா மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு மிகவும் பரபரப்பாக காணப்படும்.
ஆனால் இந்த ஆண்டு வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி கிராமங்களில் கடந்த 30ஆம் தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் அப்பகுதி முழுவதும் தாரைமட்டமானது. இதனால் 400 க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த நிலச்சரிவில் மீட்க்கப்பட்ட பலர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே பதினோராவது நாளாக இன்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக போராடி வருகின்றனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மறுவாழ்விற்க்காக வாடகை வீடுகளில் தங்க வைக்கவும் அரசு சார்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாநில அளவிலான கொண்டாட்டங்களை தவிர்க்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த வருடம் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சாம்பியன்ஷிப் நடத்தும் படகு போட்டியையும் சுற்றுலாத்துறை ரத்து செய்துள்ளது. கேரள மக்கள் ஓணம் பண்டிகையை எளிமையாக வீட்டிலேயே கொண்டாடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் கேரளா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}