வயநாடு நிலச்சரிவு.. 200க்கும் மேற்பட்டோரின் கதி என்ன?.. தீவிரமாக தொடரும் தேடுதல் வேட்டை

Aug 05, 2024,11:33 AM IST

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமாக உள்ள  200க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன என்று தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப் குழுவினர் ஏழாவது நாளாக போராடி வருகின்றனர்.


மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள வயநாடு மாவட்டம் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. குறிப்பாக முண்டக்கை, மேப்பாடி, சூரல் மலை போன்ற பகுதிகள் மண்ணோடு மண்ணாக தரைமட்டமானது. இதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோரின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. ராணுவம், இந்திய பேரிடர் மீட்பு குழுவினர், கேரள ராணுவத்தினர், காவல் துறையினர் உள்ளிட்ட பலரும் களப்பணி ஆற்றி வருகின்றனர். 




இதுவரை அடையாளம் தெரியாத 8 பேர் உடல்களை, அடையாளம் காண்பதற்கு உறவினர்கள் யாரும் வருவார்களா என்ற அடிப்படையில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும்  தொடர்ந்து  8 பேரின் உடல்களை அடையாளம் காணவில்லை. இதனால் அடையாளம் காணாத சடலங்களை  நல்லடக்கம் செய்ய மத்திய அரசு வலியுறுத்தியது. இதையடுத்து மேப்பாடி அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 சடலங்களும் புத்துமலை அருகே ஒரே இடத்தில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டன.


இந்த நிலையில் முண்டக்கை, மேப்பாடி சூரல் மலை ஆகிய பகுதிகளில் ஏழாவது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் 1000 பேர் ஈடுபட்டுள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது‌. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி  தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்