திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி காளிதாஸ், கல்யாணகுமார், ஷிஹாப் ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 6 பேர் இறந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
கேரள மாநிலம்முண்டக்கை என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 168 பலியாகியுள்ளனர். மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கிய 216 பேரை காணவில்லை என கேரள அரசு தெரிவித்துள்ளது. 2வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 9 பேர் இதுவரை உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த 34 வயதான காளிதாஸ், கட்டுமான பணிக்காக கேரள மாநிலம் சென்றிருந்த காளிதாஸ் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்துள்ளார். இதேபோல நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு பகுதியைச் சேர்ந்த கல்யாண் குமார், ஷிஹாப் ஆகியோரும் இறந்துள்ளனர்.
அதேபோல முண்டக்கை மேப்பாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். கல்யாணகுமார் என்பவரின் குடும்பத்தில் 6 பேர் பலியானதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், " கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் பணியாற்றி வந்த நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் சேரங்கோடு ஒரு கிராமம் கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முருகையா என்பவரது மகன் கல்யாணகுமார் வயது 52.
அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிர் இழந்த கல்யாண குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காலம் சென்ற கல்யாணகுமாரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}