வெயில் காலங்களில்.. சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.. சூப்பராக வந்த ஹேப்பி நியூஸ்!

Mar 05, 2025,05:37 PM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் என மக்கள் அச்சப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும்  மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏப்ரல் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அதிகாலையில் லேசான பொழிவு இருந்தாலும் கூட மதிய வேலைகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே வறண்ட கிழக்கு காற்றின் ஊடுருவலால் இனி வரும் நாட்களில் வெப்ப அலை அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தற்போது வெயில் தலைக்காட்ட துவங்கியுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதே சமயத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா எனவும்  மக்களிடையே அச்சம் ஏற்பட்டு வருகிறது. 



சென்னைக்கு குடிநீர்ப் பிரச்சினை வராது

இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், மற்றும் கண்ணன் கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 9.618 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இன்று காலை நிலவரம்:

பூண்டி நீர்த்தேக்கம்:

35 அடி (3231 மில்லியன் கன அடி) கொள்ளளவான பூண்டி ஏரியில் தற்போது 87.34 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. 

செம்பரம்பாக்கம்:

24 அடி (3645 மில்லியன் கன அடி) மொத்த கொள்ளளவான செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 91.08 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது.

புழல் அல்லது செங்குன்றம்:

மொத்த கொள்ளளவான 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)  கொண்ட புழல் ஏரியில் தற்போது 87.94 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

சோழவரம்:

மொத்த கொள்ளளவான 18.86 அடி (1081 மில்லியன் கன அடி) கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 12.86 சதவிகிதமாக உள்ளது. 

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை: 

மொத்த கொள்ளளவான 36.61 அடி (500 மில்லியன் கன அடி) கொண்ட கண்ணன் கோட்டை ஏரியில் தற்போது நீர் இருப்பு 87 சதவீதமாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொகுதிகள் மறு வரையறையை 30 வருடத்திற்குத் தள்ளி வையுங்கள்.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

news

வெயில் காலங்களில்.. சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.. சூப்பராக வந்த ஹேப்பி நியூஸ்!

news

தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது.. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்..!

news

விகிதாச்சாரம் குறையக்கூடாது.. அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு இது.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட தேவை எழுந்துள்ளது.. விசிக தலைவர் திருமாவளவன்..!

news

ஹலோ.. இன்னிக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க.. வெளில வெயிலைப் பார்த்தீங்கள்ள.. கவனம்!

news

அஜீத், கமல்ஹாசன் வழியில் நயன்தாரா.. லேடி சூப்பர்ஸ்டாரை துறந்தார்.. அடுத்து ரஜினிகாந்த்தா?

news

பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தருக்கு என்னாச்சு.. நல்லாதானே இருந்தார்.. ஏன் இந்த விபரீத முடிவு?

news

தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை.. பெரும் தண்டனையே.. விஜய் அறிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்