கல்யாணம் முடிந்த கையோடு.. மனைவிக்கு சரமாரி அடி உதை.. சர்ச்சையில் "மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்"!

Dec 23, 2023,05:44 PM IST
நொய்டா:  பிரபலமான மோட்டிவேஷனல் பேச்சாளரான விவேக் பிந்த்ராவுக்கு கல்யாணம் முடிந்து எட்டு நாட்களே ஆகியுள்ள நிலையில் மனைவியை அடித்து உதைத்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

படா பிசினஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிறுவனராக, தலைமை செயலதிகாரியாக இருப்பவர் விவேக் பிந்த்ரா. இவர் ஒரு மோட்டிவேஷனல் பேச்சாளர். பிரபலமானவரும் கூட. டிசம்பர் 6 ஆம் தேதி பிந்த்ராவுக்கும், யானிக்கா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.  திருமணமாகி எட்டு நாட்களே ஆன நிலையில் பிந்த்ரா மீது யானிக்காவின் சகோதரர்  வைபவ் குவாத்ரா, நொய்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில்,  திருமணம் நடந்து ஒரு சில நேரங்களில் யானிக்காவை அறைக்குள் அழைத்துச் சென்று தலைமுடியை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளார் பிந்த்ரா. அந்த தாக்குதலின் போது யானிகாவிற்கு காதில் அடிபட்டு காதே கேட்காமல் போய் விட்டது. மறுநாள் காலை டிசம்பர் 7ஆம் தேதி பிந்த்ராவுக்கும் யானிக்காவுடைய தாயாருக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்தக் குடும்ப தகராறில் யானிக்கா குறுக்கிட்ட போது யானிகாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது என கூறியிருந்தார்.



இந்தப் புகாரின் பேரில் போலீஸார் தற்போது 4க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் பிந்த்ரா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த யானிக்கா தற்போது டெல்லியில் உள்ள கைலாஷ் தீபக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாராம். 

பிரபலமானவராக வலம் வரும் பிந்த்ரா மீது எழுந்துள்ள இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆனால் தன் மீதான புகார்களை மறுத்துள்ளார் பிந்த்ரா.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்