டெல்லி: மணிப்பூர் பற்றி எரிய ஆரம்பித்து, 80 நாட்களுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்துப் பேசியுள்ளார். அதுவும் வெறும் 80 விநாடிகளே அவர் பேசியுள்ளார் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்
மணிப்பூர் மாநிலம் கடந்த சில மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி இனத்தவர்களுக்கும் இடையே வெடித்துள்ள இந்த கலவரத்தால், நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்த வன்முறை வெறியாட்டத்தின் விபரீத வீரியத்தை உணர்த்தும் வகையிலான ஒரு வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ���ாட்டு மக்களை பதறச் செய்தது. இரண்டு குக்கி இனப் பெண்களை மெ��்தி இனத்தைச் சேர்ந்த ஒரு வெறி பிடித்த ஆண் கும்பல் நிர்வாணமாக நடக்கச் செய்தும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியபடி வந்ததும் மக்களை வெகுண்டெழச் செய்தது.
மணிப்பூரில் நடந்து வரும் அட்டூழியங்களின் ஒரு துளியாக இது உலகுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கடும் கோபத்துடன் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். மணிப்பூரில் கலவரம் வெடித்தது முதல் வெளிப்படையாக இதுகுறித்து கருத்துக் கூறாமல் இருந்து வந்தார் பிரதமர். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து விமர்சித்து வந்தன. இந்த நிலையில் தான் பிரதமர் முதல் முறையாக இதுகுறித்து மீடியாவிடம் பேசியிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்துக் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறுகையில், 80 நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் முன்பு 80 விநாடிகள் மணிப்பூர் குறித்துப் பேசியுள்ளார் பிரதமர். ஆனால் நாடாளுமன்றத்துக்குள் ஒரு விநாடி கூட இதைப் பற்றி அவர் பேசவில்லை. பிரதமர் அவையில் இதுகுறித்துப் பேச வேண்டும். உண்மை என்ன என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.
ஆளுநர் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். உள்துறை அமைச்சகத்துக்கு தான் ஒரு அறிக்கை அனுப்பியதாக அவர் கூறியுள்ளார். அதில், 70 ஆயிரம் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். இப்படி ஒரு வன்முறை வெறியாட்டத்தை தான் பார்த்ததே இல்லை என்று அவர் கூறியுள்ளார். தனியார் சேனலுக்கு அவர் இவ்வாறு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். உள்துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலம் சென்று நிலவரம் குறித்து ஆய்வும் நடத்தியுள்ளார். ஆளுநர் இப்படிப் பேசுகிறார். இதுகுறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். உண்மை என்ன என்பதை விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மாணிக்கம் தாகூர்.
CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}