டெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக அவர் கூறியுள்ளார். இந்தத் தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
விராட் கோலி விலகல் குறித்து தேவையில்லாத ஊகங்களுக்குள் யாரும் போக வேண்டாம் என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் விலகியுள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். தனது முடிவு குறித்து கேப்டன் ரோஹித் சர்மாவிடமும், அணி நிர்வாகத்திடமும் விராட் கோலி ஏற்கனவே பேசியுள்ளார் என்றும் ஜெய்ஷா விளக்கியுள்ளார்.
விராட் கோலிக்குப் பிறகு தற்போது வேறு வீரர் சேர்க்கப்படவுள்ளார். ஜனவரி 25ம் தேதி இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 42.36 என்ற சராசரியுடன் 1991 ரன்களை எடுத்துள்ளார். கடைசியாக அவர் தென் ஆப்பிரிக்காவில் விளையாடினார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடவில்லை. அதேசமயம், கடைசி 2 போட்டிகளில் விளையாடினார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறும்.
ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!
{{comments.comment}}