சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 35,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலைகளுக்குப் போதிய பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 65 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று முதலே விநாயகர் சிலை விற்பனையும் மாநிலம் முழுவதும் களை கட்டத் தொடங்கி விட்டது. பெரும்பாலும் களிமண் சிலைகள்தான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. தெருவோரங்களில், பஜார் பகுதிகளில் சிலைகள் விற்பனை அதிகம் காணப்பட்டது. விதம் விதமான பிள்ளையார் சிலைகளும் விற்பனை செய்யப்பட்டன. விநாயகர் சிலைகள் தவிர பூஜை தொடர்பான பிற பொருட்களின் விற்பனையும் களை கட்டியிலிருந்தது. விலையும் இந்த முறை அதிகமாக இருப்பதாக மக்கள் கூறினர்.
விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வார இறுதியைத் தொடர்ந்து மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதால் அதிக அளவில் சிறப்புப் பேருந்துகளுக்கும் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அடுத்தடுத்து 3 தோல்வி.. இன்று இரண்டாவது வெற்றியை ஈட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
பங்குனி உத்திரம்.. பழனி முருகன் கோவிலில் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து: அமைச்சர் பிகே சேகர்பாபு
வார்த்தைகள் இன்றி .. வெட்கத்தில் காதல் இசையை பரப்பிய.. இலையின் இதயம்!
வங்கக்கடலில் உருவான..காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.. இந்திய வானிலை மையம்!
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
எரிபொருளின் கலால் வரி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு கண்டனத்திற்குரியது.. நாதக சீமான்!
இன்னும் 9 மாதம் தான் உங்கள் ஆட்சி.. எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாது: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
{{comments.comment}}