வெறும் ஊறுகாய்தானேன்னு அசால்ட்டா இருக்காதீங்க.. அது நம்ம உரிமை.. விழுப்புரம் ஆரோக்கியசாமியின் அதிரடி

Jul 25, 2024,06:55 PM IST

விழுப்புரம்: நாம் காசு கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளையும் முறையா கொடுக்க வேண்டியது அதை விற்பவரின் கடமை. நாம் வாங்கும் பொருட்கள் சரியான முறையில் நமக்குத் தரப்பட்டதா என்பதை கவனித்து அப்படி கொடுக்கப்படாவிட்டால், தயங்காமல் தைரியமாக அதைக் கேட்பது நமது உரிமை. அதைத்தான் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி நிரூபித்துள்ளார்.


சாதாரண ஊறுகாய் என்று நாம் நினைக்கும் அதை, ஹோட்டல் நிர்வாகம் கொடுக்காமல் அலட்சியம் காட்டியதால் நுகர்வோர் கோர்ட் வரை சென்று கடுமையான அபாரத்தைப் பெற்றுத் தந்து நுகர்வோர்களுக்கு மிகப் பெரிய விழிப்புணர்வைக் கொடுத்துள்ளார் ஆரோக்கியசாமி.


விழுப்புரம், வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்க மாநில தலைவராக உள்ளார். இவர் தனது உறவினர் நினைவு தினத்தை ஒட்டி 2022ம் ஆண்டு விழுப்புரம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலமுருகன் ஹோட்டலில் ஊறுகாயுடன் 25 சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்து பெற்றுள்ளார். 




வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான், ஊறுகாய் இல்லாதது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஹோட்டலுக்குச் சென்ற அவர் ஊறுகாய் ஏன் வைக்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு ஹோட்டல் நிர்வாகம் சரியாக பதில் சொல்லவில்லை போல. இதனால் ஊறுகாய்க்குப் பதில் காசைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு காசு தர முடியாது என்று ஹோட்டல் நிர்வாகம் மறுத்து விட்டதாம்.


இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர், பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காததால், ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.30,000, வழக்கு செலவுக்கு ரூ.5000, அத்துடன் ஊறுகாய் இழப்பீடாக ரூ.25ம் சேர்த்து மொத்தம் ரூ.35,025 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 


45 நாட்களுக்கும் அபராத தொகையை வழங்க வேண்டும். 45 நாட்களுக்குள் வழங்காவிட்டால், மாதம் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் சாப்பாட்டிற்கு  ஊறுகாய்   கொடுக்காமல் அலட்சியம் காட்டிய உணவகத்திற்கு  ரூ.35,025 ஆபராதம் விதித்து இருப்பது பலரையும் கவணிக்க செய்துள்ளது.


ஆனால் உண்மையில் ஆரோக்கியசாமி பாராட்டப்பட வேண்டியவர். சாதாரண ஊறுகாய்தானே என்றுதான் பலரும் அதை விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்த்திருப்போம்.. அது சாதாரண ஊறுகாயாக இருந்தாலும் அதற்குரிய பணத்தையும் நாம்தான் கொடுத்துள்ளோம். அப்படி இருக்கும்போது அந்தப் பொருளை கொடுக்காமல் விட்டது நமது உரிமையைப் பறிக்கும் செயல். இதைத்தான் ஆரோக்கியசாமி வழக்குத் தொடர்ந்து நிலைநாட்டியுள்ளார். மக்களுக்கு இதில் மிகப் பெரிய விழிப்புணர்வு செய்தி உள்ளது. பலரும் பல்வேறு பொருட்களை வாங்கும்போது அதில் சிறிய அளவில் ஏதாவது குறை இருந்தாலும் கூட சரி போய்ட்டுப் போகுது என்று போய் விடுகிறோம். அப்படி இருக்கக் கூடாது. பணம் கட்டி நாம் பெறும் ஒவ்வொரு சேவையிலும் நமது உரிமையும் அடங்கியுள்ளது. அது மறுக்கப்படும்போது நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும் என்பதை ஆரோக்கியசாமி வழக்கு நிரூபித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்