சென்னை: சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் அங்கே விஜயகாந்த்துக்கு என்று ஒரு மாளிகை திறந்து இருக்கும் என்று இயக்குனர் மிஷ்கின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி:
ஒரு அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் தமிழர்களின் மனதில் ஒரு பெரும் ஆலமரமாக ஓங்கி வளர்ந்து நிழல் கொடுத்து கனி கொடுத்து அருள் கொடுத்து அன்பு கொடுத்து இன்று இந்த மண்ணிலே சாய்ந்து விட்டீர்களே ஐயா.
நீங்கள் சாய்ந்தாடும் இந்த தமிழ் பூமி தவம் என உங்களை சுமக்கும். உங்கள் வேர்கள் எங்கள் இதயங்களில் பயணிக்கும். நீங்கள் விட்டுச் சென்ற விழுதுகள் இந்த பூமியில் மரங்களாய் வளரும். சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் அங்கே உங்களுக்கு ஒரு மாளிகை திறந்து இருக்கும். ஓய்வெடுங்கள் ஐயா என்றும் சிரித்த உங்கள் கன்னங்களில் நான் முத்தமிடுகிறேன் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.
எஸ்.எஸ் பாஸ்கர்
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் நடிகர் எஸ். எஸ்.பாஸ்கர். குமுறிக் குமுறி அவர் அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் உருக வைத்தது.
இயக்குநர் பாலா
என் வாழ்க்கையில நான் பார்த்த முதல் செலிபர்டி அவர் தான். உன்னதமான மனிதர். அவரை முதல் முதலில எங்க ஊருல தான் தூரத்துல இருந்து பார்த்தேன். அதுக்கப்பறம் அவரை பார்க்கனும்னு நினைச்சேன். எப்படி பார்க்கிறதுன்னு தெரியலை, ஆனாலும் அவரை பார்க்கனும் நினைச்சேன். இன்னிக்கி தான் பார்த்தேன். அவரை பத்தி பேச எனக்கு தகுதி இல்ல. அவ்வளவு பெரிய ஆளும் இல்ல, அவரு கிட்ட இருந்து நிறைய கத்துக்கிறனும். அவர் எல்லாரு மனசுலயும் இருக்காரு. எம் மனசுல நெறையா இருக்காரு என்று கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}