சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் சிறப்பாக ஒத்துழைப்பதாகவும் சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தீவிர அரசியலில் அவர் ஈடுபடுவதில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் திடீரென சென்னை மியாட் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் வழக்கமான பரிசோதனைக்காக வந்துள்ளார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் திடீரென அவர் செயற்கை சுவாசத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் இதை வதந்தி என்றும் விஜயகாந்த் நலமாக இருப்பதாகவும், தேமுதிக அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது சென்னை மியாட் மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
விஜயகாந்த் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}