சென்னை: கோட் படம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இப்படத்தின் படப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றார் நடிகர் விஜய்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய், தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இவருடன் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், அஜ்மல் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். டாப் ஹீரோயினாக வலம் வந்த சினேகா மற்றும் லைலாவும் நடித்து வருகின்றனர். இது தவிர யோகி பாபு, ஜெயராம், மோகன், போன்ற நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து மக்களை கவர உள்ளர். இது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகை திரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், அதில் அவர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.
கோட் படத்தின் அப்டேட்டுகளையும் வெளியிடுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு தொடர்ந்து கோட் பட போஸ்டர்கள் ஒன்னு, ரெண்டு, மூணு ,என்ற அடிப்படையில் வெளியிட்டார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின்
ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோட்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் சில காட்சிகள் துபாயில் படமாக்கப்பட்ட உள்ளது. அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் விஜய் விமான மூலம் துபாய் புறப்பட்டு சென்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் கேரளாவுக்குச் சென்றார். அங்கு ரசிகர்களை விஜய் சந்திப்பார் எனவும் கூறப்பட்டது. அப்போது கேரளா ரசிகர்கள் பெருத்த ஆரவாரத்துடனும் அவரை வரவேற்றனர் என்பது நினைவிருக்கலாம்.
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்
என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!
{{comments.comment}}