த.வெ.க.வின் பிரமாண்ட மாநாடு.. எப்போ எங்கே.. அட இங்கேயா.. ஆச்சரியம் + குஷியில் ரசிகர்கள்!

Jul 24, 2024,07:18 PM IST

சென்னை: நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்  கம்மிட்டான படங்களை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் களமிறங்க உள்ள நிலையில், ரசிகர்களையும், தொண்டர்களையும் உற்சாகபடுத்தும் வகையில்  திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சாதனை படைக்கும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதனை விஜயின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் போட்டியிட இருக்கிறது இக்கட்சி. 




இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய், பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், லைலா, சினேகா, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து விஜயின் 69 வது படம் தயாராக உள்ளது. இதனையும் முடித்துவிட்டு சினிமா வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டு விட்டு முழு நேர அரசியல்வாதியாக களம்காண இருக்கிறார். 


இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்களுக்கு, உற்சாகம் கொடுக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான மாநாடு நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டை எங்கு நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனையை அக்கட்சி தலைமை ரகசியமாக மேற்கொண்டுள்ளது. மாநாடு நடத்த முக்கியமான சில நகரங்கள் குறித்து ஆலோசனை செய்துள்ளனர்.


மதுரையா திருச்சியா




திருச்சி தமிழ்நாட்டிற்கு மையமானது, எனவே அங்கு நடத்தலாம் என ஒரு கருத்து ஆலோசிக்கப்பட்டது.  அதேசமயம் அதிமுக மற்றும் தேமுதிக புதிய கட்சியை தொடங்கிய போது முதல் மாநாட்டை மதுரையில் தான் நடத்தினார்கள் என்பதால் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடும் மதுரையில் நடத்தலாம் என்று இன்னொரு ஆலோசனை வைக்கப்பட்டது. 


இந்த இரண்டு ஊரும் வேண்டாம் கோவை அல்லது சேலத்தில் வைத்தால், மேற்கு தமிழ்நாட்டை ஈஸியாக கவர் செய்யலாம் என்று ஒரு தரப்பு ஆலோசனை கூறியதாம். இல்லாவிட்டால் சென்னைக்கு அருகில் உள்ள  காஞ்சிபுரத்தில் மாநாடு நடத்தவும் ஒரு பரிசீலனை செய்யப்பட்டதாம். இந்த மாநாடு தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு என்பதால் மிகச் சிறப்பாக நடத்த கட்சித் தலைவரான விஜய் ஆர்வமாக உள்ளாராம்.


இந்த ஆலோசனையில் தற்போது திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி கசிந்து வருகிறது. மாநாடு நடத்தப்படும் இடம் குறித்து சமீபத்தில் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துள்ளாரம். இதனால் ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர். தொண்டர்கள், ரசிகர்கள் என பல மாநிலங்களில் இருந்தும் படை போல கிளம்பி வர காத்துக் கிடக்கிறார்களாம்.


இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடியும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் அதற்கான வேலையும் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.மாநாடு எங்கு நடைபெறும் என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேசமயம் எங்கே மாநாடு நடந்தாலும் பட்டையைக் கிளப்புவது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்