கோவை: யார் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கோங்க. ஆனா நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்க என்று இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள படம் ரோமியோ. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வரும் 11ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசுகையில், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தான் ரோமியோ திரைப்படம் உருவாகி உள்ளது. குறிப்பாக, மனைவிமார்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது. ஒவ்வொரு கணவரும் தனது மனைவியை இப்படத்துக்கு அழைத்து வரவேண்டும்.
ரோமியோ படம் காதல் குறித்து விளக்குவதாகவம், திருமணத்துக்குப் பிறகு கணவன் மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த படத்தில் பேசி இருக்கிறோம்.பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள். ஆண்கள் நிறைய இடங்களில் தோல்வி அடையும் போது அவர்களை தேற்றுவது ஒரு தாய், மனைவி போன்றவர்களே. நல்ல படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
நான் அனைத்து கட்சிக்கும் ஆதரவு அளிக்கிறேன். அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அதை தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். வாக்குக்கு பணம் கொடுப்பதோ, பெறுவதோ தவறாக இருந்தாலும் வறுமை குடும்ப சூழ்நிலை கருதி அதைப் பெற்றுக் கொள்ளலாம். அது உங்கள் பணம் தான். ஆனால் பணம் பெற்று விட்டோம் என்பதற்காக அந்த கட்சிக்குதான் வாக்கு செலுத்துவோம் என்று இல்லாமல் நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}