- வர்ஷினி
சென்னை: அக்டோபர் 6ந் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியிட தயாராக உள்ள ரத்தம் திரைப்படம் 100% திருப்தியை அளிக்கும். இப்படத்தை பார்க்கும்போது திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் என தனது பட அனுபவத்தை நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார்.
நடிகரும், இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி ரத்தம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தொடர்ந்து வெற்றியைப் பெற்ற இவருடைய படங்களை அடுத்து வரும் விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது வர்த்தக வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது.
அக்டோபர் 6 ந் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. தமிழ் படம் 1 மற்றும் தமிழ் படம் 2 படங்களை இயக்கிய சி .எஸ் அமுதன் ரத்தம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸின் கமல் போஹ்ரா, டி .லலிதா, பி .பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர் . கண்ணன் நாராயணன் இசையமைக்கிறார் .கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, படத் தொகுப்பை
டி .எஸ் சுரேஷ் கையாண்டு உள்ளார்.
படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து விஜய் ஆண்டனி கூறியதாவது:
சி.எஸ்.அமுதனின் திறமை குறித்து எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படங்கள் எடுப்பதில் பிரபலமானவர் என்றாலும், வெவ்வேறு ஜானர்களில் கதையை படமாக்குவதிலும் அவர் திறமையானவர். ரத்தம் படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு உடனே பிடித்துப் போனது மற்றும் அந்தக் கதையை காட்சிப்படுத்துவதும் மிகவும் எளிதாக இருந்தது. என் கேரியரில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று நான் நம்பினேன். மேலும், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். படத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்கும் போது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.
இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. முழு கதையும் அவர்களால் தான் நகரும். தீவிரமான அர்ப்பணிப்புடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் கூட படத்திற்கு வலு சேர்க்கும். ‘ரத்தம்’ படம் பார்த்து விட்டு பார்வையாளர்கள் திரையரங்குகளை விட்டு வெளியே வரும்போது நிச்சயம் அவர்களுக்கு 100% திருப்தியைத் தரும்" என கூறினார் விஜய் ஆண்டனி.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}