சென்னை: உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 படம் குறித்த அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏஜிஎஸ் என்டர்டென்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது. நடிகர் விஜய் அப்பா மகன் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் சினேகா, பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதே சமயம் படம் வெளியாகி ஐந்து நாட்களில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. குறிப்பாக இப்படத்தில் கேப்டன் விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் காட்சிப்படுத்தியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான எச் வினோத் இயக்கத்தில் விஜய் 69 படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படமே விஜய்யின் திரை வாழ்க்கையில் கடைசி படம். இதனால் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும்.. இப்படத்தின் நடிகர் நடிகை யார் யார் ..என்பது தொடர்பாக இப்பொழுதே ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அப்படத்தின் கே.என் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. படம் குறித்த எதிர்பார்ப்புகளும், பேச்சுக்களும் இன்றிலிருந்தே தொடங்குவதாகவும் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்
என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!
{{comments.comment}}