85 பேருடன் சேர்ந்து 1 லட்சம் கோடியை சுருட்டிய  பெண் தொழிலதிபர்.. மலைக்க வைக்கும் மெகா மோசடி!

Apr 11, 2024,04:07 PM IST

ஹனோய்:  வியட்நாமைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 1 லட்சத்து 4 ஆயிரத்து 214 கோடியே 18 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்து சிக்கியுள்ளார். அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்படவுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.


வியட்நாமைச் சேர்ந்தவர் டிருவோங் மை லான். மிகப் பெரிய தொழிலதிபர். வான் தின் பாட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரும் இவரது கூட்டாளிகள் 85 பேரும் சேர்ந்து மிகப் பெரிய பண மோசடியில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர். வியட்நாமை இந்த வழக்கு பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் செய்த குற்றத்துக்காக இவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோர்ட்டே கடும் கோபத்துடன் கூறியுள்ளது.




கடந்த பத்து வருடங்களில் சைய்கான் கமர்ஷியல் வங்கியில் இந்த அளவுக்கு பணத்தை சுருட்டியுள்ளது இந்த கும்பல்.  மொத்தம் 85க்கும் மேற்பட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர்கள் மீதான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.. அனேகமாக இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படலாம் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வழக்கில் டிருவோங் மை லான் தவிர முன்னாள் இன்னாள் வங்கி அதிகாரிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் என பலரும் சிக்கியுள்ளனர். மிகப் பெரிய அளவில் நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு நாட்டையே அதிர வைத்துள்ளார்கள்.



அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், வங்கி விதிகளை மீறியது உள்ளிட்ட புகார்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.  தன் மீதான புகாரை மை லான் மறுத்துள்ளார். தனக்குக் கீழ் உள்ளவர்கள்தான் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இவர்தான் அத்தனை மோசடிகளுக்கும் மூளை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். மை லானுக்கு மரண தண்டனைதான் தர வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர். கோர்ட்டும் கூட மிகக் கடுமையான தண்டனைதான் சரியானது என்று கருத்து தெரிவித்துள்ளது.


மை லான் கைது செய்யப்பட்டு அவரது முறைகேடுகள் வெளியானதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஹனாய் நகரில் போராட்டத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்

news

கோடை விடுமுறை... 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

news

பழம்பெரும் கோவில்கள்.. வீரத்தின் விளை நிலம்.. கலைகளின் தாயகம்.. நம் தாய்த் திரு தமிழ் நிலம் (2)

news

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!

news

அனுமதி இல்லாமல் பாட்டை பயன்படுத்திய.. அஜித் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்

news

நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி

news

அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

news

மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்