வேளாங்கண்ணி: புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
நாகப்பட்டனம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா ஆலயம் உலகப் புகழ் பெற்றது. மத வேறுபாடு இல்லாமல் எல்லா மதத்தவரும் இங்கு வந்து வணங்கி வழிபட்டுச் செல்வது வழக்கம். ஆண்டு தோறும் இங்கு செப்டம்பர் மாதம் 8ம் தேதி ஆரோக்கிய மாத திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
அதன்படி நேற்று கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்கியது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கொடியேற்றம் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. கொடியேற்றத்தை காண தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்காணோர் குவிந்துள்ளனர்
வேளாங்கண்ணியில் நேற்று தொடங்கி, செப்.8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி வேளாங்கண்ணியில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போதிய தங்குமிடம், குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடல் பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பல லட்சம் பேர் வேளாங்கண்ணிக்குப் பயணப்படுவார்கள் என்பதால் சிறப்பான போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!