சென்னை: சென்னை- திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை செப்., 24ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.
இதோ வருகிறது அதோ வருகிறது என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை ஒரு வழியாக வந்து விட்டது. சென்னை எழும்பூரிலிருந்து இருந்து திருநெல்வேலி வரை இந்த ரயில் செல்லும். எழும்பூரிலிருந்து இயக்கப்படவுள்ள முதல் வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை டூ நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50க்கு புறப்பட்டு இரவு 10.40க்கு நெல்லை சென்றடையும். வழியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை ரயில் நிலையங்களில் நிற்கும். அதேபோல காலை 6மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50க்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
3வது வந்தே பாரத் ரயில்: தமிழ்நாட்டில் 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை – மைசூரு மற்றும் சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்குகின்றன. இதில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் தற்போது 3வது வந்தே பாரத் ரயிலை தமிழ்நாடு பெறுகிறது. தமிழ்நாட்டுக்கு மேலும் சில வந்தே பாரத் ரயில்களும் வரப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. படிப்படியாக இவை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!
வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!
மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!
{{comments.comment}}