சென்னை டூ நெல்லை வரை.. வந்தே பாரத் ரயில்.. எப்போது தொடங்கும்?

Sep 04, 2023,04:42 PM IST
சென்னை: வந்தே பாரத் ரயில் சேவை சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை வரும் நவம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்தியாவின் அதி வேக ரயிலாக வந்தே பாரத் ரயில்கள் வர்ணிக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்கள் வேகமாகவும் பயணிகளை விரைவாகவும் கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கு 2019 ஜனவரி 27ஆம் தேதிதான் வந்தே பாரத் விரைவு ரயில் என பெயரிடப்பட்டது. முதல் சோதனை ஓட்டம் டெல்லி -வாரணாசி இடையே நடந்தது. 



சென்னை  ஐ.சி.எப்பில்தான் தற்போது வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு இதுவரை 33 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 26 வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயைப் பொறுத்தவரை, சென்னை -மைசூர், சென்னை சென்ட்ரல் - கோவை மற்றும் காசர்கோடு- திருவனந்தபுரம் இடையே தினமும் தலா ஒரு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வந்தே பாரத் ரயில்களின் சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னை -திருப்பதி மற்றும் எழும்பூர்- நெல்லை இடையே தினசரி வந்தே பாரத் சேவை தொடங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரயில்களுக்கு கொள்கை ரீதியான ஒப்புதலை ரயில்வே வாரியம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

31-வது வந்தே பாரத் ரயில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டமும் சமீபத்தில் தான் நடைபெற்றது. இந்த ரயில் மங்களூர் -பாலக்காடு அல்லது சென்னை -மங்களூர் இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத்  ரயில் சேவை நவம்பரில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த ரயில் பாதையில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ரயிலின் வேகத்தை  தாங்கும் வகையில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அவை முடிவடைந்ததும், அனேகமாக நவம்பர் மாதத்தில் சென்னை எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்