- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
இது மனிதனின் மாய உணர்வு .!!
இது உயிர்களின் உள்மூச்சு...!!
இது உலகின் புரியாத புதிர்..!!
இது இதயத்தின் இதமான தாலாட்டு..!!
இது அற்புதமான உணர்வுகளின் சங்கமம்...!!
இது ஒரு மாபெரும் மாய சக்தி ...!!
இது நதி போல் பாய்ந்து கடலாய் முடியும்..!!
இது அன்பைவிதைத்து அன்பைஅறுவடை செய்யும்..!!
இரண்டு இதயத்தினை இணைக்கும் இழை..!!
இதயத்தை வருடும் இதமான தென்றல்..!!
இன்பம்துன்பம் நிறைந்த இனிய பயணம்..!!
இருமனம் இணைந்து ஒருமனமாகும் நேசம்..!!
சில நேரங்களில் வசந்தகாலம், பூத்து குலுங்கும் ..!!
சில நேரங்களில் கோடைகாலம் ,வெந்து தனியும்..!!
சில நேரங்களில் மழை காலம் ,கண்ணீர் சிந்தும்..!!
சில நேரங்களில் பனிக்காலம், நடுங்க வைக்கும் .!!
உண்மை காதல் தீயவனை நல்லவனாக்கும்..!!
உண்மை காதல் காதலையே பழி கொடுக்கும்..!!
உண்மை காதல் எதிலும் உறுதுணையாய் நிற்கும்..!!
உண்மைகாதல் மரணம்வரை நேசிக்கவைக்கும்..!!
ஒருவர் உணர்வை ஒருவர் என்றும் மதித்தலும் ,
ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையும்,
விட்டுக் கொடுத்தலும், புரிந்து கொள்ளுதலுமே.,
காதல் வெற்றிக்கான ரகசியங்கள் ...!!!
காதலே வாழ்க..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}