பெங்களூரு: உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த 37 வயதுப் பெண் பெங்களூர் ஹோட்டலில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஜரீனா. 37 வயதான இவர் டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்திருந்தார். பெங்களூர் வந்திருந்த இவர் சேஷாத்ரிபுரத்தில் உள்ள ஜெகதீஷ் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று நீண்ட நேரமாகியும் இவர் அறையை விட்டு வராமல் இருந்துள்ளார். இதனால் மாலை 4. 30 மணியளவில் ஒரு ஹோட்டல் ஊழியர் போய் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உள்ளே கதவு பூட்டியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸுக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மாற்றுக் கீ போட்டுத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜரீனா பிணமாகக் கிடந்தார். இதையடுத்து போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூழலைப் பார்க்கும்போது இது கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர் மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பவுரிங் மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவில்தான் மரணம் எப்படி சம்பவித்தது என்று தெரிய வரும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}