லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ அருகே பஸ்ஸும், பால் வண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 19க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. பீகார் மாநிலம் சீதாமார்ஹி என்ற இடத்திலிருந்து டெல்லி நோக்கி ஒரு டபுள் டெக்கர் பஸ் வந்து கொண்டிருந்தது. அதே திசையில் பால் வண்டி ஒன்று பஸ்ஸுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது. இன்று காலை உன்னாவோ அருகே இரு வாகனங்களும் போய்க் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி மீது பஸ் வேகமாக மோதியது.
இதில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் படு வேகமாக மோதியதால் தூக்கி எறியப்பட்டது. அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. உடைந்து கிடந்த கண்ணாடித் துகள்கள், தூக்கி வீசப்பட்ட பயணிகளின் பொருட்கள், சூட்கேஸ்கள், உடல்கள் என அந்த இடமே கோரமாக காணப்பட்டது.
அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து எப்படி நடந்தது என்று தெரியவில்லை. முன்னால் போய்க் கொண்டிருந்த லாரியை பஸ் ஓவர் டேக் செய்ய முயன்றபோது விபத்து நேரிட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.
காயமடைந்த பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்
என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!
{{comments.comment}}