ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் பயங்கரம்.. பால் வண்டி மீது பஸ் மோதி.. 18 பேர் பலியான பரிதாபம்

Jul 10, 2024,10:29 AM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ அருகே பஸ்ஸும், பால் வண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 19க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. பீகார் மாநிலம் சீதாமார்ஹி என்ற இடத்திலிருந்து டெல்லி நோக்கி ஒரு டபுள் டெக்கர் பஸ் வந்து கொண்டிருந்தது. அதே திசையில் பால் வண்டி ஒன்று பஸ்ஸுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது.  இன்று காலை உன்னாவோ அருகே இரு வாகனங்களும் போய்க் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி மீது பஸ் வேகமாக மோதியது. 




இதில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் படு வேகமாக மோதியதால் தூக்கி எறியப்பட்டது. அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. உடைந்து கிடந்த கண்ணாடித் துகள்கள், தூக்கி வீசப்பட்ட பயணிகளின் பொருட்கள், சூட்கேஸ்கள், உடல்கள் என அந்த இடமே கோரமாக காணப்பட்டது.


அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து எப்படி நடந்தது என்று தெரியவில்லை. முன்னால் போய்க் கொண்டிருந்த லாரியை பஸ் ஓவர் டேக் செய்ய முயன்றபோது விபத்து நேரிட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.


காயமடைந்த பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்