"ஐயா.. மன்னிச்சுருங்க".. இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய பொருட்களை திருப்பித் தந்த திருடர்கள்!

Feb 13, 2024,08:40 PM IST

மதுரை: கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடித்த தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் வீட்டிலேயே வைத்துச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபல இயக்குனர் மணிகண்டன். இவர் காக்கா முட்டை, கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். குறிப்பாக இவர் இயக்கிய காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருதுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவருடைய வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி எழில் நகரில் உள்ளது. திரைப்பட வேலை காரணமாக சென்னை சென்ற இயக்குனர் குடும்பத்தினர் கடந்த இரண்டு மாதங்களாக வசித்து வருகின்றனர். அப்போதுதான் கடந்த 8ஆம் தேதி இவரது வீட்டில் கொள்ளை நடந்தது.




மணிகண்டன் வசித்து வந்த வீட்டில் ஓட்டுனர்கள் ஜெயக்குமார் மற்றும் நரேஷ் குமார் ஆகியோர் தினமும் அவர் வளர்க்கும் நாய்க்கு வழக்கமாக உணவு கொடுத்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பதறிப்போய் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 


விசாரணையில் பீரோவில் இருந்த ஒரு லட்ச ரூபாய் ரொக்கம், இரண்டு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், ஐந்து பவுன் நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதாக தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செய்தனர். 


இதனை அடுத்து டிஎஸ்பி  நல்லு தலைமையில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மணிகண்டன் வீட்டுக் கதவில் ஒரு கேரி பேக் தொங்க விடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் வந்து பார்த்தபோது அதில் ஒரு துண்டுத் தாளில் "ஐயா எங்களை மன்னித்து விடுங்கள்.. உங்கள் உழைப்பு உங்களுக்கு".. என்று எழுதப்பட்டிருந்தது. பையில், கொள்ளையடித்த பதக்கங்கள் இருந்தன. 


இயக்குநர் வீடு என்று தெரிய வந்ததாலும், போலீஸார் தீவிரமாக தேடி வந்ததாலும் பயந்து போய் திருடிய பொருட்களை திருடர்கள் வைத்து விட்டுப் போயிருக்கலாம் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்