ஒரிகான்: அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில், ரயில் நிலைய பிளாட்பார்மில் நின்றிருந்த 3 வயது சிறுமியை ஒரு பெண் தண்டவாளத்தில் தள்ளி விட்டதால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் டிசம்பர் 28ம் தேதி நடந்துள்ளது. தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரிகானில் உள்ள ரயில்வே நிலையத்தில் பயணிகள் பலர் ரயிலுக்காக காத்திருந்தனர். அதில் இந்த 3 வயது சிறுமியும் அடக்கம். சிறுமி, நின்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்குப் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண், வேகமாக எழுந்து வந்து சிறுமியை பிடித்து தண்டவாளத்தில் தள்ளி விட்டு விட்டு மீண்டும் அமர்ந்து கொண்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த அசம்பாவிதத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து குழந்தையைத் தூக்கி காப்பாற்றி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அப்போது ரயில் வரவில்லை.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவரது பெயர் பிரையானா லேஸ் ஒர்க்மேன், 32 வயதாகிறது. ஏன் இவர் இப்படிச் செய்தார் என்று தெரியவில்லை. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மல்டினோமா கோர்ட்டில் இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்தப் பெண்ணுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}