அநியாயமாக பலியாகும் அப்பாவிகள்.. இஸ்ரேலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. போன் போட்ட பிடன்!

Oct 15, 2023,11:08 AM IST

வாஷிங்டன்: இஸ்ரேலின் அசுரத்தனமான தாக்குதலால் அப்பாவி பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து பலியாகி வரும் நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பிடன்.


ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல். தனது வான்வெளித் தாக்குதல் மூலம் காஸா பகுதியை நிர்மூலமாக்கிய இஸ்ரேல் தற்போது தரை வழித் தாக்குதலையும் தொடங்கியுள்ளது. இதனால் அப்பாவிகள் பலர் பலியாகும் அபாயம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மறுபக்கம் உலக அளவில் இஸ்ரேலின் தாக்குதலை பலரும் கண்டிக்க ஆரம்பித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவிப்போரும் கூட தாக்குதலை குறைத்து விட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.




இஸ்ரேலை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் அமெரிக்கா, தற்போது இஸ்ரேலுக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பைத் தொடர்ந்து பாலஸ்தீன தலைவர்களுடன் பேசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இஸ்ரேலைக் காப்பாற்றும் Damage control நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகு, பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் ஆகியோரை அதிபர் பிடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இப்படி ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட இஸ்ரேலுக்கு உதவ மறுபக்கம் போர் விமானங்களையும், போர்க்கப்பலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துக் கொண்டுதான் உள்ளது.


பாலஸ்தீன அதிபருடன் பிடன் பேசுகையில், ஹமாஸ் நடவடிக்கையைக்  கண்டித்துள்ளார். பாலஸ்தீன மக்களின் உரிமைக்காகவும், சுய நிர்ணயத்துக்கும், கெளரவத்துக்காகவும் துணை நிற்கும் தகுதி ஹமாஸுக்கு இல்லை என்றும் பிடன் கூறியுள்ளார். நதன்யாஹுவிடம் பேசும்போது, அந்த நாட்டின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை சரியே என்றும் கூறியுள்ளார். இருப்பினும் அப்பாவி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்ளுமாறும் நதன்யாகுவை பிடன் வலியுறுத்தியிருக்கிறார்.


மேலும் போர் பாதித்த பகுதிகளில் அப்பாவி மக்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் கிடைப்பது தடைபடக் கூடாது என்றும் பிடன், நதன்யாகுவிடம் ஆலோசித்துள்ளார். இதுதொடர்பாக ஐ.நா, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் பிடன் ஆலோசித்துள்ளார்.  அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் பிடன் கூறியுள்ளார்.


அதேசமயம், பாலஸ்தீன மக்களின் உயிர்களுக்கு மிரட்டலாக மாறியுள்ள ஹமாஸ் அமைப்பின் செயல்பாடுகளை அனைத்து நாடுகளும் கண்டிக்க வேண்டும் என்றும் பிடன் அழைப்பு விடுத்துள்ளார்.


மறுபக்கம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் முஸ்லீம் நாடுகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். ரியாத் சென்ற அவர் அங்கு சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் பைசல் பின் பர்ஹானை சந்தித்துப் பேசினார். பின்னர் அபுதாபி சென்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயத் அல்நஹன்யானை சந்தித்துப் பேசினார். முஸ்லீம் நாடுகளின் ஆதரவை, இஸ்ரேலுக்கு திருப்பும் அமெரிக்க முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்