திருமண வாழ்க்கை போதும்.. கணவரிடமிருந்து விவாகரத்து கோருகிறார் நடிகை ஊர்மிளா!

Sep 25, 2024,12:48 PM IST

மும்பை : பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் தனது கணவர் மோக்சின் அக்தர் மிரிடம் இருந்து விவகாரத்து பெற்றுத் தரும்படி கோர்ட்டை அணுகியுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.


பிரபல பாலிவுட் நடிகையும், பாலிவுட் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியுமாக இருந்தவர் ஊர்மிளா. ரங்கிலா படத்தின் மூலம் பாலிவுட் மட்டுமின்றி மற்ற மொழி சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் ஊர்மிளா. இவர் தமிழில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்திலும் நடித்துள்ளார். இவர் 2016ம் ஆண்டு மோக்சினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது விவகாரத்து கோரி உள்ளார்.




ஊர்மிளா தனது கணவரை பிரிய முடிவு எடுத்ததற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இது வரை அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அதே சமயம் விவகாரத்து பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டு, மும்பை கோர்ட்டில் விவாகரத்து மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


நன்கு யோசித்து, ஆலோசித்த பிறகே ஊர்மிளா இந்த முடிவை எடுத்ததாகவும், அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. பரஸ்பர அடிப்படையில் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே ஊர்மிளா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் தொடர்பான போட்டோக்களை பகிர்வதை நிறுத்தி விட்டார். கடைசியாக அவர் 2023ம் ஆண்டு ரம்ஜானுக்கு தான் தனது கணவருடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து இருந்தார்.


மோக்சின், காஷ்மீரை சேர்ந்த தொழிலதிபர். இவர் பிரபல மாடலும் கூட. இவரும் ஊர்மிளாவும் முதல் முறையாக 2014ம் ஆண்டு டிசைனர் மணிஷ் மல்கோத்ராவின் உறவினர் வீட்டு திருமணத்தில் தான் சந்தித்து கொண்டனர். அதற்கு பிறகு நெருக்கமாக பழகி வந்த இருவரும் 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் முதலில் இஸ்லாமிய முறைப்படியும், பிறகு அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கிய முறைப்படியும் நடைபெற்றது. 


மோக்சின் சில படங்களிலும் நடித்துள்ளார். பிறகு சினிமாவில் இருந்து விலகி, தொழிலில் கவனம் செலுத்த துவங்கினார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஊர்மிளா திவாரி என்ற வெப்சீரிசில் நடித்து வருகிறார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்