கெளதமிக்கு ராஜபாளையம் சீட்டைத் தராததற்கு இதுதான் காரணம்.. எல். முருகன் விளக்கம்

Oct 23, 2023,11:04 AM IST

சென்னை: நடிகை கெளதமி பாஜகவுக்காக உழைத்துள்ளார். அவர் கட்சியிலிருந்து விலகியுள்ளது வருத்தம் அளிக்கிறது. அவர் கூறியுள்ள புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.


கெளதமிக்கு ராஜபாளையம் சட்டசபைத் தொகுதியைக் கொடுக்காததற்கு என்ன காரணம் என்பதையும் எல். முருகன் விளக்கியுள்ளார்.


பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்த நடிகை கெளதமி திடீரென அக்கட்சியை விட்டு விலகியுள்ளார். அக்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் சி. அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது சொத்துக்களை மோசடியாக தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்டு விட்டதாக கெளதமி புகார் கூறியுள்ளார். இந்த மோசடி நபருக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பலர் இருப்பதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.




இது தனக்கு  பெரும் வலியைக் கொடுத்துள்ளதாகவும், வேதனையுடன் கட்சியை விட்டு விலகுவதாகவும் கெளதமி கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெளதமி கொடுத்த புகாரை தற்போது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் உள்பட 6 பேர் தற்போது தலைமறைவாக உள்ளனர்.


இந்த நிலையில் கெளதமி விலகல் குறித்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  நடிகை கெளதமி என்ன காரணத்துக்காக விலகியுள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்துள்ளார். அவரது பணிகள் அனைத்துமே பாராட்டுக்குரியவையாகும். அவர் என்ன காரணம் கூறியிருந்தாலும் அதுகுறித்து விசாரிக்கப்படும்.


ராஜபாளையம் சட்டசபைத் தொகுதியை அவர் கேட்டிருந்தார் என்பது உண்மைதான். ஆனால் கூட்டணிக் கட்சி சார்பில் அது கேட்கப்பட்டதால் கடைசி நேரத்தில் அதை விட்டுக் கொடுக்க நேரிட்டது. இதனால்தான் கெளதமிக்கு சீட் தர முடியாமல் போனது என்றார் எல். முருகன்.


கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர் எல். முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்