மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று மதுரை வருகிறார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாயக்கர் பட்டி, அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 48 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இதனை அடுத்து டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சட்டப்பேரவை குளிர்காலகூட்டத் தொடரில் டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்காமல் அரிட்டாப்பட்டிக்கு உட்பட்ட 500 ஏக்கரை மட்டும் தவிர்த்து பிற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த போராட்டத்திற்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.இந்த திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதாகவும் அறிவித்தது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது, மத்திய அரசு ரத்து முடிவை எடுக்கக் காரணமாக அமைந்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 26ம் தேதி அரிட்டாபட்டியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அரிட்டாபட்டிக்கு வந்த முதல்வர் அங்கு மக்கள் பிரதநிதிகள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி பகுதி கிராம மக்களை சந்திக்க உள்ளார். டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று மாலை நடைபெறவிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!
{{comments.comment}}