பட்ஜெட்டில்.. தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.. டாக்டர் ராமதாஸ்

Jul 23, 2024,07:08 PM IST

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருள்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டு இருப்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு இருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. அதே நேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமான வரிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவை ஆக உள்ளன. 


ஒரு நாட்டின் வளர்ச்சியை கடந்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 2023-24 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிலையான நிதிநிலை அறிக்கையில், இந்த மூன்று துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.புற்றுநோயால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.




வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும் காலநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய அதிக விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் வகைகளில் அறிமுகம் செய்யப்படும். அடுத்த இரு ஆண்டுகள் ஒரு கோடி உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு வளர்ச்சி துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 2.66 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை இவை வேளாண் வளர்ச்சிக்கும் கிராமப்புற வறுமை ஒழிப்பிற்கும் வழி வகுக்கும்.


அடுத்து வரும் ஆண்டுகளில் நான்கு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு ரூபாய் 2 லட்சம் கோடி செலவிடப்படும். ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 5000 உதவி தொகை ஒருமுறை உதவியாக 6000 நிதியுடன் தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படும். முதல் முறையாக வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு முதல் மாதத்தில் மட்டும் இரட்டை ஊதியம் வழங்கப்படும். அரசின் வேறு எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு கல்வி கடனாக ரூபாய் 10 லட்சம் வரை வழங்கப்படும். தொழிலாளர்கள் தங்குவதற்கு வாடகை வீடுகள் கட்டித் தரப்படும் என்பன் உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.


தங்கம் மற்றும் வெள்ளி கடத்தலை தடுக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. தங்கம் வெள்ளி மீதான இறக்குமதி வரி முழுமையாக குறைக்கப்பட வில்லை என்றாலும் கூட 15 விழுக்காட்டில் இருந்து ஆறு விழுக்காடாக குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதாகும். அதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை 4200 வரை குறைய கூடும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது மட்டுமின்றி தங்கம் கடத்தி வரப்படுவதையும் தடுக்கும் செல்பேசிகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டு இருப்பதால் அவற்றின் விலையும் குறையும்.


நடைப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது வருமான வரிகளில் மாற்றங்கள் செய்யப்படுமா? என்பதைத்தான் புதிய வருமான வரிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனால் ரூபாய் 15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூபாய் 17,500 வரை மிச்சமாகும் என்பதும் வரவேற்கத்தக்கது. ஆனால் பழைய வருமான வரிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படாது பெரும் ஏமாற்றம் அடைகிறது. புதிய வருமான வழிமுறை செலவுகளை ஊக்குவிக்க கூடிய பழைய வருமான வழிமுறை சேமிப்பை ஊக்குவிக்க கூடியதாகும். புதிய வருமான வரிமுறையில் சலுகை வழங்கியதன் மூலம் செலவுகளை அரசு ஊக்குவிக்கிறது. இது குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றாலும் நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சேமிப்புகள் தான் கை கொடுக்கும் என்பதால் பழைய வருமான விகிதங்களிலும் அரசு மாற்றங்களை செய்ய வேண்டும்.


ஆந்திர பிரதேசம் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்களில் ஒன்றாவது விசாகப்பட்டினம், சென்னை இடையிலான தொழில் வழிச்சாலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு பயன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் கோதாவரி மற்றும் காவிரி இணைப்புத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட் கட்டமைப்பு திட்டங்கள், பாசன திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்