மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையிலான போரில் லேட்டஸ்டாக ஒரு நடிகை உயிரிழந்துள்ளார். இவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஆவார்.
அந்த நடிகையின் பெயர் பொலினா மென்ஷிக். 40 வயதான இவர் டான்பாஸ் பிராந்தியத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிக் கொண்டிருந்தார். ரஷ்ய ராணுவத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது. அப்போது உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொலினா பரிதாபமாக உயிரிழந்தார்.
டான்பாஸ் பிராந்தியமானது உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமானது. ஆனால் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் அது உள்ளது. இந்த நிலையில் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவத்தினரை மகிழ்விப்பதற்காக ஒரு நடன, இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில்தான் பொலினா கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த கலாச்சார மையத்தைக் குறி வைத்து உக்ரைன் தனது ஹிமார்ஸ் ரக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் பொலினா உள்பட 25 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்தபோது பொலினா கிதாருடன் மேடையில் பாடிக் கொண்டிருந்தாராம்.
இந்த சம்பவம் குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள போர்ட்டல் ஸ்டுடியோ நாடக மையம் இரங்கல் தெரிவித்துள்ளது. இங்குதான் முன்பு பொலினா பணியாற்றியுள்ளார். பொலினா முன்பு இயக்கி நடித்த நாடகம் ஒன்றை அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடத்தப் போவதாகவும் இந்த மையம் அறிவித்துள்ளது.
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}